தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 98 வது பிறந்த நாள் விழா நகர தலைவர் வேலு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவர் சங்கீதா முன்னிலை வகித்தனர். இதையடுத்து பஸ் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நகர பொதுச் செயலாளர்கள் பெருமாள், சக்திவேல், செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சசிகுமார், சுரேஷ், பாபு உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக