தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வித்யா மந்திர் பள்ளி தெருவில் உள்ளி ஆஞ்சநேயர் கோயில், போலீஸ் நிலையம் பின்புறம் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், கடமடையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அனுமன் ஜெயந்திவிழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், பூஜைகளும் நடைபெற்றது. 1008 மிளகு வடையால் மாலை அணிவித்தும், பாதாம் முந்திரியால் தயாரிக்கப்பட்ட 5 கிலோ வெண்ணையை கொண்டு அலங்காரமும் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர்.
பெண்கள் அனைவரும் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். மாலை ஆஞ்சநேயர் பவனி வீதி உலா நடைப்பெற்றது. அனுமன் ஜெயந்திவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அனைவாக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக