இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வழக்கறிஞர் செந்தில், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து பஸ் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக புரட்சி தலைவர், எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் வெங்கல திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் சுப்ரமணி, மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாணவர் அணி செயலாளர் முருகேசன், முன்னாள் தொகுதி அமைப்பாளர் கிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தசாமி, எம்.ஜி.ஆர் மன்ற நகர செயலாளர் கிரி, நகர இணை செயலாளர் இலட்சுமிகொளந்தை, கவுன்சிலர் விமலன், தகவல் தொழில்நுட்ப பபிரிவு சோமேஸ்வரன் கிளை கழக செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், கட்சி முன்னோடிகள், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக