பெடல் பார் சைக்கிள் என்ற அமைப்பு புனேவில் இருந்து மிதிவண்டியில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரி செல்கின்றனர். அதில் மூன்று ஆண்கள் ஒரு பெண் உட்பட நான்கு நபர் குழு புனேவியில் இருந்து கிளம்பி ஒன்பது நாட்களை கடந்து இன்று தருமபுரி மாவட்டம் வந்தடைந்தனர். அவர்கள் இன்று தருமபுரியில் இருந்து ஓமலூர், சேலம் வழியாக மதுரை செல்கின்றனர். பிறகு இறுதியாக கன்னியாகுமரி செல்கின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்து வரும் மை தருமபுரி அமைப்பினர் தகவல் அறிந்து அவர்களை வரவேற்றனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் முஹம்மது ஜாபர் அவர்கள் நேரில் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வழியனுப்பி வைத்தார்.
அவர்களுடைய விழிப்புணர்வு பேரணி வெற்றியடைய மை தருமபுரி அமைப்பின் சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என மை தருமபுரி அமைப்பின் தன்னார்வலர் ஜபார் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக