தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் அதிமுக ஒ.பி.எஸ் அணி ஒன்றிய நகர கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 35ம் ஆண்டு நினைவு நாள் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வடக்குஒன்றிய செயலாளர் சபரி, தெற்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ், நகர செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து பஸ் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக புரட்சி தலைவர், எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் வெங்கல திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர்கள் மாது, ராஜகுரு, மாவட்ட பொருளாளர் குமார், இணைச் செயலாளர் முனிதா, மாவட்ட பிரதிநிதி ராஜி மற்றும் கட்சி முன்னோடிகள், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள்.பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக