மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் -2022-23. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 டிசம்பர், 2022

மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் -2022-23.

மாதிரி படம்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் 2022-2023 (Tamil Nadu Chief Minister’s Trophy Games 2022-23) என்ற பெயரில் மாநிலம் முழுவதும் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படவுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக பொதுப்பிரிவு, பள்ளி கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்படும்.


போட்டி முன் பதிவு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் (www.sdat.tn.gov.in) வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.


போட்டிகளில் கலந்து கொள்ள விதிமுறைகள்

  1. பொதுப்பிரிவு – இதில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து ஆகிய விளையாட்டுக்களில் பொதுப் பிரிவில் உள்ளவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படஉள்ளது.
  2. பள்ளியில் பயில்பவர்கள். இதில் 12 வயது முதல் 19 வயது உள்ளவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
  3. கல்லூரியில் பயில்பவர்கள். இதில் 17 வயது முதல் 25 வயது உள்ளவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம்.
  4. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயில்பவருக்கு கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேசைப்பந்து, டென்னிஸ், கையுந்துபந்து, பளுதூக்குதல், கடற்கரை விளையாட்டுப்போட்டிகள் ஆகிய விளையாட்டுக்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
  5. மாற்றுத்திறனாளிகளில் போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை.
  6. மாற்றுத்திறனாளி (Differently Abled) – 50 மீ ஓட்ட பந்தயம், இறகுபந்து, மேசைப்பந்து ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
  7. பார்வைத்திறன் மாற்றுத்திறனாளி (Visually Impaired) – 100மீ ஓட்ட பந்தயம், சிறப்பு கையுந்துபந்து ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
  8. மனவளர்ச்சி குன்றியோர் (Intellectually Challenged) 100மீ ஓட்டப்பந்தயம், எறிபந்து ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
  9. செவித்திறன் மாற்றுத்திறனாளி (Hearing Impaired) 100மீ ஓட்டப்பந்தயம், கபடி ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
  10. அரசு ஊழியர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. கபடி, தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து, செஸ் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
  11. பளுதூக்குதல், கடற்கரை கையுந்துப்பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுக்கள் மண்டல அளவில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். பிற விளையாட்டுக்கள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வர்.
  12. பொதுப்பிரிவு மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். 
  13. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு மாவட்ட அணிகளின்சார்பாக மாநிலப் போட்டிகளில் கலந்து கொள்வர். 
  14. தனிநபர் போட்டிகளில் தரவரிசையின்படி சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

மாவட்ட அளவில் தனிநபர் /ஒற்றையர், இரட்டையர் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப் பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.3000/- இரண்டாம் பரிசு ரூ.2000/-மூன்றாம் பரிசு ரூ.1000/-வழங்கப்பட உள்ளது.

  1. மாவட்ட அளவிலான குழுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப்பெறும் அணிகளில் உள்ள ஒவ்வொருவருக்கும் முதல் பரிசு ரூ.3000/- இரண்டாம் பரிசு ரூ.2000/- மூன்றாம் பரிசு ரூ.1000/- வழங்கப்பட உள்ளது.
  2. போட்டிகளில் அதிக அளவில் பதக்கம் பெறக்கூடிய பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பயிற்சியாளருக்கு தமிழ்நாடு அரசின்சிறந்த பயிற்சியாளர் மற்றும் சிறந்த உடற் கல்வி இயக்குநர் ஆகிய விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.
  3. முதல் மூன்று மாவட்டங்களுக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்புக்கான முதலமைச்சர் கோப்பை-அனைத்துப்பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அதிக பதக்கங்கள் பெற்று முதல் மூன்று இடம் பெறும் மாவட்டங்களுக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்புக்கான முதலமைச்சர் கோப்பை வழங்கப்படும்.
  4. போட்டியில் திறமையானவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகள் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் உள்ள காலியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் நேரடியாக சேர்த்து தொடர் பயிற்சிகள் வழங்கப்படும்.
  5. மேற்கண்ட மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் வீரர் வீராங்கனைகள் ONLINE பதிவு செய்து கலந்து கொண்டு தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad