இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப, அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC GROUP-II, IIA, 2022 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்விற்க்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 23.11.2022 அன்று காலை 10.00 மணி முதல் துவங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://cutt.ly/MMrrs1T என்ற Google படிவத்தில் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
TNPSC GROUP-II,IIA 2022, முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்விற்க்கான இலவச பயிற்சி வகுப்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப, அவர்கள் அதில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக