நேரு யுவ கேந்திராவின் சார்பில் தீவிர தன்னார்வலர்கள் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 நவம்பர், 2022

நேரு யுவ கேந்திராவின் சார்பில் தீவிர தன்னார்வலர்கள் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் இன்று பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி முதல்வர் முனைவர் பாக்கியமணி தலைமையில் தீவிர தன்னார்வலர்கள் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.




நிகழ்ச்சியில் சின்னபள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பழனி, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் வெங்கடாசலம், கொளரவ விரிவுரையாளர் அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.முன்னதாக நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். 

நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் அபிலேஷ் நன்றி கூறினார். மேலும் கல்லூரி முதல்வர் பாக்கியமணி கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு சிறப்பித்தார். கடந்த மாதம் பாப்பாரப்பட்டி சின்ன ஏரி பகுதி தூய்மை இந்தியா திட்ட இரண்டாம் கட்ட நிகழ்வின் தூய்மை செய்தல் பணி மேற்கொண்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் பாராட்டப்பட்டஅவர்களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது.


100க்கும் மேற்ப்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad