மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இணைவோம் மகிழ்வோம் நிகழ்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 நவம்பர், 2022

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இணைவோம் மகிழ்வோம் நிகழ்வு.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி "உலக மாற்றுத்திறனாளிகள் தினம்' கொண்டாடப்படும் நிலையில் நவம்பர் 14 ஆம் தேதி முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 


இதனையொட்டி 17.11.2022 இணைவோம் மகிழ்வோம் நிகழ்வாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அதியமான்கோட்டை மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எர்ரஅள்ளியில் நடைபெற்றது. இதில் Dr.M.சவிதா கலந்துக் கொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு சலுகைகள் பற்றியும் வேலை வாய்ப்புகள் பற்றியும் எடுத்துக் கூறினார் மேலும் இளம் வயதில் கண்டறிதல் பற்றியும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்தல் பற்றியும் விவரமாக மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். 


இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனபிரியா அவர்கள், வட்டார வள் மைய ஒருங்கிணைப்பாளர் ரதிதேவி அவர்கள், சிறப்பு பயிற்றுநர் தெய்வம் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad