பாலக்கோட்டில் நாளைய மின் நிறுத்தம் ரத்து - செயற்பொறியாளர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 நவம்பர், 2022

பாலக்கோட்டில் நாளைய மின் நிறுத்தம் ரத்து - செயற்பொறியாளர் தகவல்.

தர்மபுரி மாவட்டம் வெள்ளி சந்தை துணை மின்நிலைய செயற்பொறியாளர் வனிதா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக  பாலக்கோடு சுற்று வட்டார பகுதியான பாலக்கோடு, சுகர்மில், எர்ரன அள்ளி, கடமடை, கொல்ல அள்ளி, தண்டுகாரணஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளி சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மல்லுப்பட்டி, மல்லாபுரம், பொரத்தூர், மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, தப்பை, மதகிரி, கட்டம்பட்டி, கரகதஅள்ளி, புலிக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை சனிக்கிழமைகாலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக நாளை நடைபெற இருந்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

Post Top Ad