அரூர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி - வட்டாட்சியர் பங்கேற்பு - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 நவம்பர், 2022

அரூர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி - வட்டாட்சியர் பங்கேற்பு


தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் தலைமையாசிரியர் அருட்தந்தை. பால் பெனடிக்ட், தாளாளர் அருட்தந்தை. ஆல்பர்ட் ஜோசப் மற்றும் உதவித் தலைமையாசிரியர்.செல்வராஜ்  தலைமையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.   


இதில்  சிறப்பு அழைப்பார்களாக அரூர் வட்டாட்சியர் கனிமொழி கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து மாணவ மாணவிகள் இடையே சிறப்புறையாற்றி கண்காட்சியை ஆய்வு செய்து பார்வையிட்டார்.


இதில் அப்பள்ளியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட  மாணவ மாணவியர்  தங்களின் கைவண்ணத்தில் உருவாக்க பட்ட  மிக்ஸி, கைத்துப்பாக்கி, ராக்கெட், மழை அலாரம், நில நடுக்க அலாரம், வெக்யூம் கிளினர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காட்சிக்காக வைத்திருந்தனர்.


இதனை அரூரை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கண்டு களித்து  மகிழ்ந்தனர். 


அறிவியல், கண்காட்சிகளை  அறிவியல்  ஆசிரியைகள், ஜோஸ்ப்பின், ஜெசிந்தா,  அர்ச்சனா,  மற்றும் ஆசிரியர்கள் ஜெயவேல், சாமிநாதன், சிங்காரம் தீர்த்தகிரி, பிரிட்டோ, விஜய் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad