தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தயாரிக்கும் சமையலருக்கான உணவு பாதுகாப்பு மேலாண்மை பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 நவம்பர், 2022

தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தயாரிக்கும் சமையலருக்கான உணவு பாதுகாப்பு மேலாண்மை பயிற்சி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மகளிர் சுய உதவிக் குழு அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி அவர்களின் ஆலோசணை படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் சார்ந்து உணவு தயாரிக்கும் மகளிர் மேம்பாட்டு சுய உதவி குழு சமையலருக்கான பயிற்சி தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால்  வரவேற்புரை ஆற்றினார்., மாவட்ட  மேலாண்மை உதவி திட்ட இயக்குநர் பெரியநாயகம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) ராஜேந்திரன்   ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பாலக்கோடு ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் காலை உணவு சமைக்கும் சமையலர்கள் 111 நபர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.  இப்பயிற்சியை உணவு பாதுகாப்புதுறை அங்கீகாரம் பெற்ற பரிக்ஷன் அமைப்பின் பயிற்றுனர் கார்த்திக் பங்கேற்று பயிற்சியளித்தார்.  

உணவு தயாரிக்கும் மற்றும் உணவு பொருள்கள் சேமிப்பு இடங்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் தன்சுத்தம், சுற்றுப்புற சுத்தம், பொருள் மேலாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு விதிகள், உணவு பொருள்கள் கையாளுதல், பராமரித்தல்,  பயன்பாடு, எலி, கரப்பான்,  ஈ மற்றும் பூச்சிகள் கட்டுபடுத்துதல், வராமல் தவிர்ப்பது மேலும் மளிகை பொருள்கள், காய்கறிகள்,  உள்ளிட்ட சமைக்காத, சமைத்த  பொருள்கள் இருப்பு வைத்தல் எந்த நிலையில் உபயோகித்தல் எப்படி கையாளுதல், பணியாளர்கள் சுகாதாரம் பேணுதல் பயிற்சி மற்றும் பரிசோதனை  என எழு தலைப்புகளில் உணவு சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

 

மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.பானுசுஜாதா பேசியதாவது  முதலைமைச்சரின் காலை உணவு திட்டம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படவும் காலை உணவு தரமாகவும் சுகாதாரமாகவும் சத்தாகவும் அளித்திட மகளிர் மேம்பாட்டு மேலாண்மை மகளிர் குழு  இத்திட்டத்தை திறம்பட கையாள இப்பயிற்சி உதவும் எனவும் விரைவில் மீதமுள்ள பள்ளி சமையலர்க்கும் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்து உணவு தயாரிக்கும் கூடத்தில் தினந்தோறும் மாதிரி உணவு எடுத்து வைக்கவும் உணவு பொருள்கள் காலாவதி தன்மை கவனித்து உபயோகிக்க அறிவுறுத்தினார். 


ஆட்சியர் நேர்முக உதவியாளர்(சத்துணவு) மணிமேகலை  சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாலக்கோடு வட்டார வள மைய மேலாளர் சிவலிங்கம் நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad