
தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தீர்மானங்கள் குறித்தும், வருகிற பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் விளக்கி பேசினார். வருகிற 27-ம் தேதி கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவை தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும். விழாவையொட்டி கிராமங்கள் தோறும் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கியும், நலத்திட்டங்கள் வழங்கியும் கொண்டாட வேண்டும்.
மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தமைக்கும், தர்மபுரி கிழக்கு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவித்தமைக்கும் தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான பி.பழனியப்பன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், வைகுந்தன், மல்லமுத்து, சபரிநாதன், கருணாநிதி, மடம்முருகேசன், செல்வராஜ், பேரூராட்சி செயலாளர்கள் வீரமணி, சண்முகம் நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நல்லம்பள்ளி ஒன்றிய குழு துணை தலைவர் பெரியண்ணன், சார்பு அணி மாவட்ட அமைப்பாளர்கள் கவுதமன், பொன் மகேஸ்வரன், சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக