அரூர் அருகே அடிபட்டு கிடந்த சிட்டுக்குருவி உயிர்ப்பு கொடுத்த இளம்பெண். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 நவம்பர், 2022

அரூர் அருகே அடிபட்டு கிடந்த சிட்டுக்குருவி உயிர்ப்பு கொடுத்த இளம்பெண்.


தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ஹேமா ஸ்ரீ தம்பதியினர் தங்களது உறவினர் வீட்டிற்கு பைக்கில்  நேற்று காலையில் சென்றுள்ளனர். அப்பொழுது பெத்தூர் அருகே சாலையில் சிட்டுக்குருவி அடிபட்டு துடிதுடித்து கிடந்ததை கண்ட ஹேமா ஸ்ரீ வாகனத்தை நிறுத்தி சிட்டுக்குருவியை கையில் எடுத்து பார்த்தபோது  சிட்டுக்குருவி அடிபட்டு உயிருக்கு போராடிய துடிதுடித்துக் கொண்டிருந்தது.

அதற்கு தண்ணீர் கொடுப்பதற்கு தங்களிடத்தில் தண்ணீர் பாட்டில் இல்லாததால் செய்வதறியாது திகைத்து நின்றபோது  காலை நேர பனிமூட்டத்தில் அருகில் உள்ள புற்களின் மீது பனித்துளிகள் தேங்கி கிடந்து அவர் கண்ணுக்குபட்டது. 


சிட்டுக்குருவியை கையில் ஏந்திய ஹேமா ஸ்ரீ புற்களின் மேலிருந்த பனித்துளிகளை எடுத்து தனது கைகளால் சிட்டுக்குருவிக்கு தண்ணீர் ஊற்றியுள்ளார். மயக்க நிலையில் இருந்தது சிட்டுக்குருவி, சிறிது நேரத்திற்கு பிறகு சுயநினைவுக்கு வந்து, மெல்ல கண் விழித்து நடக்க தொடங்கியுள்ளது. 


மீண்டும் ஹேமா ஸ்ரீ பனித்துளிகளை கொண்டு சிட்டுக்குருவிக்கு தண்ணீர் ஊட்டினார். சிறிது நேரம் கழித்து சிட்டுக்குருவி உயிர்ப்புடன் பறந்து சென்றதை  கண்ட ஹேமா ஸ்ரீ, பன்னீர்செல்வம் தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சாலையில் சென்றவர்கள் இதைப் பார்த்து தம்பதியினர் பாராட்டி சென்றனர். சிட்டுக்குருவி என்று இளம் பெண் காப்பாற்றியது அரிய வகை வெண் தொண்டை சிலம்பன் பறவை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad