திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் : 1.உறுதிமொழி எடுத்தல்,2. விழிப்புணர்வு பேரணி ,3. இணைவோம் மகிழ்வோம் ,4. ஒருங்கிணைந்த விளையாட்டுப் போட்டிகள், 5. ஒருங்கிணைந்த கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள், 6. சிறார் திரைப்படங்கள்,7. சைகை மொழி தமிழ் தாய் வாழ்த்து ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

திட்டமிட்டபடி முதற்கட்டமாக, 14.11.2022 அன்று தர்மபுரி ஒன்றியத்தில் உள்ள 161 பள்ளிகளிலும் முதல் நிகழ்வான காலை இறைவணக்கக் கூட்டத்தில் உறுதிமொழி எடுத்தல் நிறைவேற்றப்பட்டது. இதில் பல்வேறு பள்ளிகளில் பஞ்சாயத்து தலைவர்கள் ,எஸ் எம் சி உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்கள் போன்றோரை வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், குமாரசாமிப் பேட்டை, திருவள்ளுவர் அறிவகம் அரசு உதவி பெறும்பள்ளி காலை இறைவணக்கக் கூட்டத்தில், தர்மபுரி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி கவிதா அவர்கள் கலந்துகொண்டு உறுதிமொழியினை ஏற்று மாணவர்களுக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்து விழிப்புணர்வு செய்தார். இந்த மாபெரும் தொடர் விழிப்புணர்வின் நோக்கமான,
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஏதுவான சூழலை உருவாக்குதல் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுதல் பணியில், அனைத்து ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மேற்பார்வையாளர் பொறுப்பு, அனைத்து குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக