நேரு யுவ கேந்திராவின் சார்பில் அரசியலமைப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 நவம்பர், 2022

நேரு யுவ கேந்திராவின் சார்பில் அரசியலமைப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்.


தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் அரசியலமைப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.‌

கருத்தரங்கில் தருமபுரி அரசு கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர்கள் முருகன், தீர்த்தகிரி, ரியல் பவுண்டேசன் இயக்குநர் செந்தில்ராஜா, முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் மோகன், வழக்கறிஞர் இராஜேஷ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அரசியலமைப்பு குறித்த விழிப்புணர்வு அளித்தனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார்.


அரசு பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் பேராசிரியர் பரமேஸ்வரன்‌, முனைவர் கார்த்திகேயன், உதவி பேராசிரியர் பிரேம் குமார், செட்டிகரை அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் மணிகண்டன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.250க்கும் மேலான கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.


மேலும் பேச்சுப் போட்டி, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad