விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில் தகுதி பெற்ற மாணவிகளை பாராட்டிய தலைமை ஆசிரியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 நவம்பர், 2022

விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில் தகுதி பெற்ற மாணவிகளை பாராட்டிய தலைமை ஆசிரியர்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே செல்லியம்பட்டி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கால்பந்தாட்ட விளையாட்டு போட்டியில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரி பெஞ்சமின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தர்மபுரி  மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான  கால்பந்து போட்டியில்  முதலிடம் பெற்று அடுத்த மாதம் நடைபெறும்  மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பள்ளியில் உலக கால்பந்தாட்ட வீரர் லியோ மெஸ்லியின் கட் அவுட்டர் வைத்து மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று  பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்தஉடற்கல்வி ஆசிரியர் பிரான்சிஸ் அவர்களையும் பள்ளியின் தலைமையாசிரியர் பெஞ்சமின் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad