பென்னாகரம் தனியார் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 நவம்பர், 2022

பென்னாகரம் தனியார் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை - பென்னாகரம் வட்டாரம்  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நாகதாசம்பட்டி மற்றும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பென்னாகரம் சார்பாக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பென்னாகரம் இரத்த வங்கி குழு மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நாகதாசம்பட்டிக்கு உட்பட்ட நல்லானூர் ஜெயம் பொறியியல் கல்லூரி -ல் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.


இந்த இரத்த தான முகாமினை பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயச்சந்திர பாபு அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் இம்முகாமில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பென்னாகரம் இரத்த வங்கி மருத்துவ அலுவலர், டாக்டர் அருண் பிரசாத் நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்,  NMS, கல்லூரி முதல்வர்  மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆய்வக நுட்புணர்கள், கலந்து கொண்டனர். இறுதியில்  இரத்ததானம் செய்த மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad