வரும் 19ஆம் தேதி நடைபெறும் TNPSC Group l தேர்வுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 நவம்பர், 2022

வரும் 19ஆம் தேதி நடைபெறும் TNPSC Group l தேர்வுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-Group l -ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான முதன்மைத்தேர்வு வருகின்ற 19.11.2022 சனிக்கிழமை அன்று முற்பகல் மட்டும் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 35 தேர்வு மையங்களில் சுமார் 10,838 தேர்வர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர்.

இத்தேர்வு மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு காலை 9.00 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டுமெனவும், 9.00 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்கு வந்தால் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து, அவற்றை முழுமையாக கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது, என மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad