தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூர் வீட்டு வசதி பிரிவு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூர் வீட்டு வசதி பிரிவு, தருமபுரி மாவட்ட திட்டப்பகுதிகளில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள வீடுகள் மற்றும் மனைகள் ஆகியவற்றிக்கு 05.09.2022 முதல் 03.10.2022 வரை பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இவ்வினங்களில் ஒதுக்கீடுதாரர்களை தெரிவு செய்யும் பொருட்டு ONLINE முறையில் குலுக்கல் வருகின்ற 21.11.2022 அன்று ஒசூரில் உள்ள தாசப்பா கல்யாண மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக