அரூர் அடுத்த கம்மாளம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம், மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கம்மாளம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம், மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 108 பால்குடம் எடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அலங்கரிக்கப்பட்ட அம்மனை பல்வேறு வீதிகளில் உலா வந்ததை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர் அன்பு, சிறப்பு விருந்தினராக அம்மன் கிரானைட்ஸ் உரிமையாளர் முத்துராமசாமி கோவில் தர்மகர்த்தா ஏழுமலை, ஊர் பெரியவர் பீமன்திருப்பதி, விழா ஏற்பாட்டாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக