தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதிக்கு உட்பட்ட அரூர், பாளையம், நரிப்பள்ளி, சிக்களூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளின் முன்பு மர்ம நபர்கள் நடமாட்டம்கடந்த சில நாட்களாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வெளியாட்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நின்று கொண்டு கடைகளை கண்காணித்து வருகின்றனர்.
அவர்கள் யார் என்ற எந்த விவரமும் தெரியவில்லை மேலும் அவர்களை கடை ஊழியர்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் மதுபாட்டில்களை விற்கக் கூடாது என கூறுகின்றனர் இதனால் அனைத்து ஊழியரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் மேலும் ஊழியர்கள் பணி முடிந்து செல்லும் போது அவர்களின் உயிருக்கு உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது இதன்மூலம் வெளிநபர்கள் விற்பனைத் தொகை கொள்ளையடிக்கப்படும் நிலை உள்ளது.
கடைகளில் விற்பனை ஒட்டுமொத்தமாக குறையும் சூழ்நிலையும் உள்ளது இதுபோன்ற சூழலில் கடந்த 19 ஆண்டுகளில் எப்போதும் நடந்தது இல்லை எனவே மாவட்ட மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக