மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்க கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 மார்ச், 2022

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்க கோரிக்கை.

அரூரில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிவோரை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரூர் நகர் பகுதியில் 10}க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ளனர். ஏதோ ஒரு வகையில் மன ரீதியிலான பிரச்னையால் பாதிக்கப்பட்டு உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டதால் மன நோயாளிகளாக சாலைகளில் சுற்றித் திரிகின்றனர்.

இந்நிலையில், அரூர் பேருந்து நிலைய வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வாகனங்கள் மீது கற்களை வீசி வருகிறார். மேலும், அந்த நபர் கடைகளுக்கு திடீரென தீ வைத்து ஓடிவிடுவதாக வணிகர்கள் புகார் கூறுகின்றனர். எனவே, அரூர் வட்டாரப் பகுதியில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்க்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.