தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் வட்டுவன அள்ளி ஊராட்சி ஜெல்மாரம்பட்டி கிராமத்தில் நிதிசார் கல்வி பயிற்சி முகாம் நடைபெற்றது.இந்த முகாமினை தமிழ்நாடு கிராம வங்கி பி அக்ராகரம் கிளை, நபார்டு வங்கி மற்றும் ஸ்பீடு தொண்டு நிறுவனம் ஆகியோர் இணைந்து நடத்தினர்.
இந்த நிதிசார் கல்வி பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் பி. அக்ராகரம் ஸ்பீடு தொண்டு நிறுவன செயலாளர் அறிவழகன் வரவேற்புரை நிகழ்த்தினார் தமிழ்நாடு கிராம வங்கி பி.அக்ராகரம் கிளை மேலாளர் கே ஜி முரளிதரன் தலைமை ஏற்று நிதிசார் முகாம் குறித்து பேசினார் இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அரசின் காப்பீடு மற்றும் பென்சன் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பாக பிரதம மந்திரி விபத்து காப்பீட்டு திட்டத்தில் வருடத்திற்கு ரூபாய் 12 செலுத்தினால் இரண்டு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெறலாம், அதேபோல் பிரதம மந்திரி ஆயுள் காப்பீடு திட்டத்தில் ஆண்டுக்கு ரூபாய் 380 செலுத்தினால் இரண்டு லட்சம் வரை இழப்பீடு பெறும் வழிமுறைகள் குறித்தும் மற்றும் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் ரூபாய் 1000 முதல் 5000 வரை மாதம் பென்ஷன் எவ்வாறு பெறலாம் என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.
மேலும் பணமில்லா பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம் செயல்பாடுகள் பற்றியும் பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் வங்கி ஊழியர் பிரகாஷ் மற்றும் ஸ்பீடு தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் மேனகா ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியில் ஜெல்மாரம் பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகன் நன்றி கூறி முடித்து வைத்தார். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக