தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள மலைகாரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கந்தம் மாள்(வயது 58).
இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து கந்தம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக