Type Here to Get Search Results !

நல்லம்பள்ளி அருகே ‘கள்’ இறக்கிய 2 பேர் கைது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே இலளிகத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது45). இதேபோல் கொமத்தம் பட்டியை சேர்ந்தவர் ராமு(48). இவர்கள் இருவரும் பனை மரத்தில் அனுமதியில்லாத கள்ளு இறக்கி விற்பனை செய்வதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கண்ணன் லளிகத்திலும், ராமு கொமத்தம்பட்டி பகுதியிலும் கள்ளு இறக்கி விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies