அரூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 டிசம்பர், 2021

அரூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் இன்று அரூர் அருகில் உள்ள நம்பிபட்டி ஏ.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாளாளர் அரிகரன் தலைமையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது, கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கில் உதவி பேராசிரியர் திரு.நெப்போலியன், ஸ்பீடு தொண்டு நிறுவன துணைத்தலைவர் பெருமாள் ஆகியோர் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்துரைகள் வழங்கினர், சென்னாங்குப்பம் ஊராட்சி துணை தலைவர் வேலு, நேரு யுவ கேந்திரா சார்பில் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன், தேசிய இளைஞர் தொண்டர்கள் விக்னேஷ், முனியரசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கருத்தங்கில் 100க்கும் மேலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad