குடும்ப பிரச்சனையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 டிசம்பர், 2021

குடும்ப பிரச்சனையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே சூடானூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி அண்ணாமலை (வயது.30) இவருடைய மனைவி கனகா, இவர்களுக்கு 3 வயதில் 1 ஆண் குழந்தையும், 2 மற்றும் 1 வயதில் 2 பெண் குழந்தைகள் என 3 குழந்தைகள் உள்ளது. 

அண்னாமலை குடும்பத்துடன் பாலக்கோடு அருகே பொரத்தூர் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வந்தார், கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையல் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள உத்தரத்தில் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பாலக்கோடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad