350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிதான புலி குத்திபட்டான் கல் கண்டுபிடிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 டிசம்பர், 2021

350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிதான புலி குத்திபட்டான் கல் கண்டுபிடிப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகத்திலேயே அதிக நடுகற்களைக் கொண்ட மாவட்டமாகும், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்திதிக்கு வந்த தகவலை அடுத்து பர்கூர் ஒன்றியம் வலசகவுண்டனுர் ஊராட்சிக்கு உட்பட்ட  கூச்சானுர் பழனி என்பவரின் வீட்டின் முன்பக்கத்தில் உள்ள நடுகல் ஆய்வு செய்யப்பட்டது . இந்த நடுகல் அரிதான கல்வெட்டுடன் கூடிய புலிக்குத்திப்பட்டான் கல் ஆகும்.

இந்த நடுகல் பற்றி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறும் போது இந்த நடுகல் சுமார் 350 ஆண்டுகள் பழமையானது ஆகும் விஜயவருசத்து பங்குனி மாதம் இந்த நடுகல் எடுத்திருக்கிறார்கள் அந்த காலத்தில் இந்த பகுதியானது பாரூர் பற்றில் இருந்துள்ளதை இந்த கல்வெட்டு தெரிவிக்கிறது .அதுபோலவே காடாண்டான் பள்ளி என்ற ஊர் தற்போதுள்ள –கண்ணன்டள்ளி என்பதும் இக்கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.

காடாண்டான்பள்ளி என்ற ஊரைச்சேர்ந்த பிள்ளை நாயன் மகன் பெரிய பிள்ளான் என்பவன் சாமனக்கல் என்ற ஊரில்  புலியை குத்தி கொன்று தானும் இறந்திருக்கிறான்.  அவனுடைய மகன் பொன்னாயன் இந்த நடுகல்லை எடுத்துள்ளான்.

நடுகல் சிலையமைப்பு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது . வீரன் குறுகிய நீளமுடைய குத்தீட்டியால் புலியின் மார்புப்பகுதியில்  குத்திகொல்கிறான். நாய் ஒன்று புலியின் காலை கடிப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. வீரனோடு இருந்த நாயும் இறந்து அவனும் இறந்ததன் நினைவாக இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நடுகல் வீட்டின் மேற்பகுதியில் விளக்கு வைப்பதற்காக இரண்டு அல்லது நான்கு விளக்கு குழிகள் இருக்கும். ஆனால் இந்த கல்லில் சுமார் 60 குழிகள் உள்ளது. இது ஆராயப்படவேண்டிய ஒன்றாகும். ஏனெனில் அதிக குழிகள் கொண்ட நடுகல் வீட்டின் மேல்கல்லை முதன் முதலாக இங்குதான் பார்த்துள்ளோம். மேலும் இம்மூடுகல், நடுகல் வீட்டின் மற்ற கற்களைவிட பழமையானதாக காணப்படுவதால் பெருங்கற்படைக்கால கல்திட்டையின் மேற்கல்லை எடுத்து இதற்கு பயன்படுத்தியிருக்கவும் வாய்ப்பு உள்ளது.

இந்த ஆய்வுப்பணியில் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி, ரவி ஆசிரியர் சதாநந்தகிருஷ்ணகுமார். விஜயகுமார், பிரகாஷ, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகிறோர் ஈடுபட்டனர் .

கருத்துகள் இல்லை:

Post Top Ad