அரசு துவக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர அரசுக்கு கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 டிசம்பர், 2021

அரசு துவக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர அரசுக்கு கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த வீரகவுன்டனூர் பகுதியில் அரசு துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர் இப்பள்ளியில் குடிநீர், கழிப்பிட வசதி இன்றி பள்ளி மாணவர்கள் சாலையோர இயற்கை உபாதை கழிக்கும் நிலையில் இருந்து வருகின்றன.

மேலும் மழைக்காலங்களில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தில் மழைநீர் கசிந்து பள்ளி அறைகள் முழுவதும் தண்ணீர் தேங்கும் நிலை இருந்து வருகிறது, மாணவர்களின் எதிர்காலம் நலனின் கருத்தில் கொண்டு அரசு சார்பில் இப்பள்ளியை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad