கொரோனா காலநிவாண ஊக்கத்தொகை வழங்ககோரி CITU உள்ளாட்சி துறை தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 அக்டோபர், 2021

கொரோனா காலநிவாண ஊக்கத்தொகை வழங்ககோரி CITU உள்ளாட்சி துறை தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

கொரோனா காலநிவாண ஊக்கத்தொகை வழங்ககோரி CITU உள்ளாட்சி துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அரசானை 2 டி, எண் 62,ன் படி தினக்கூலி காண்டிராக்ட் தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 596 ஊதியம் வழங்கவேண்டும்.நகராட்சி பேரூராட்சி ஊராட்சிகளில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் தூய்மை பணியை தனியாருக்கு விடுவதை கைவிடவேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மாவட்ட தலைவர் சி.கலாவதி தலைமைவகித்தார், மாவட்ட பதுச்செயலாளர் ஆர்.செல்வம் தலைமைவகித்தார்.சிஐடியு மாநிலசெயலாளர் சி.நாகராசன்,சங்க பொறுப்பாளர் ஜி.நாகராஜன் பொருளாளர் டி.வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

கருத்துகள் இல்லை:

Post Top Ad