ஒசூர் அருகே வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 16 பேரை சுற்றிவளைத்த போலிசார்: 1,80,000 ரூபாய் ரொக்கம், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி அரசனட்டி பகுதியில் உள்ள குட்டி என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஏராளமானோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களுக்கு வந்த இரகசிய தகவலின் பேரில், அரவிந்த் தலைமையிலான சிப்காட் போலிசார் குட்டி வீட்டில் சோதனை மேற்கொண்டதில் சீட்டு விளையாடி வந்த 16 பேரை போலிசார் சுற்றி வளைத்தனர்.
வீட்டின் உரிமையாளர் குட்டி உட்பட 16 பேரை கைது செய்த போரிசார் அவர்களிடமிருந்து 16 செல்போன்கள், 1,80,600 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, சீட்டாடிய 6 பேரில் 10 பேர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்: ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் சூதாட்டம் உள்ளிட்ட சட்ட விரோதமான செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்த அவர், உங்கள் பகுதிகளில் இதுப்போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது பொதுமக்கள் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் தகவல் அளிப்போரின் தகவல் இரகசியம் காக்கப்படும் என் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக