கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், குதிரை சத்தம் பட்டியை சார்ந்த மாது வயது 45, இவர் தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், வெள்ளைக் கல்லில் சரவணபவன் ஓட்டலில் இரவுநேர கொடி அசைக்கும் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
அக்டோபர் 10 அன்று காலை 11:45 மணி அளவில் முடி திருத்தம் செய்து கொண்டு சாலையை கடக்க முயன்ற போது, அதிவேகமாக சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த டாடா ஆல்ட்ரோஸ் வண்டி இந்த வாகனம் அதிக வேகமாக வந்து மோதியதில் பலத்த காயம் அடைந்தார் பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் L&T ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர் பின்னர் சிகிச்சை பலனின்றி மாது உயிரிழநதுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், தொப்பூர் காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக