மாவட்டதலைவர் பி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார், அரசு பணியாளர் சங்க மாநில பிரச்சார செயலாளர் எஸ்.சுகமதி மாநிலசெயற்குழு உறுப்பினர் ஜி.தனசேகரன், மாவட்டசெயலாளர் ஏ.குமார்,நிர்வாகிகள் சீணிவாசன் கலைவாணி அன்பழகன் லட்சுமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் நியாயவிலைகடை பணியாளர்களுக்கு மாத முதல் தேதியில் ஊதியம் வழங்கவேண்டும். அனைத்து நிதிபயண்களும் ஏடிஎம் மூலம் வழங்கவேண்டும். கொரோனா காலத்தில் பணிபுரிந்து இறந்த ஊழியர் குடுமபத்துக்கு ரூபாய் 25 இலட்சம் வழங்கவேண்டும். இவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு வேலை வழங்கவேண்டும். கொரோனா காலத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஊக்க தொகை வழங்கவேண்டும். கூட்டுறவுத்துறை நியாய விலை கடைகளில் 3500, விற்பணையாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது, மாவட்டபொருளாளர் ஜி.ஜான் ஜோசப் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக