தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல் தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் மரு.மா.மதிவேந்தன் அவர்கள் இன்று (12.10.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ளது ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கில் வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மீன் விற்பனை செய்யும் கூடம், சமையல் செய்யும் கூடம், இளைஞர்கள் விடுதி, சிறுவர் பூங்கா, முதலை பண்ணை, அரசு மீண் பண்ணை, வாகனங்கள் நிறுத்தும் இடம், ஊட்டமலை பரிசல் துறை, வண்ணமீன் காட்சியகம், தமிழ்நாடு சுற்றுலா விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் மரு.மா.மதிவேந்தன் அவர்கள் நேரில் பார்வையிட்டு மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக