பரபரப்பை ஏற்படுத்திய காதலர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 அக்டோபர், 2021

பரபரப்பை ஏற்படுத்திய காதலர்கள்.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே ராமாபுரம் சின்னகுட்டி மகன் பிரதீப்(25) என்ஜினியர் படித்தவர். அதே ஒன்றியத்திற்கு உட்பட்ட  ஈஞ்னூரை சார்ந்த விக்ரமன் மகள்  ஜனனி (22) (எம்எஸ்சி) (ஐடி) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர்களிடையே ஓராண்டுக்கு மேலாக காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆம் தேதி  பெண்ணை காணவில்லை என அவரது தகப்பனார் விக்ரமன் 6ஆம் தேதி மொரப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள கோவிலில் இந்து முறைப்படி தாலிகட்டி இருவரும் திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். அவர்களை தர்மபுரி எஸ்பிக்கு தகவல் கொடுத்து காதல் ஜோடியை ஒப்படைத்தார். பிறகு பாதுகாப்பு கருதி கம்பைநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடியை தங்க வைத்தனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காணாமல் போன பெண் குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பெண்ணின்  உறவினர்கள் மொரப்பூர் பஸ் ஸ்டாண்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நேற்று போலீசார் அந்த காதலர்களை அரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜனனி எனது பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை கணவருடன் சென்று ஓசூரில் ஏதாவது ஒரு வேலை செய்து பிழைப்பு நடத்தி கொள்கிறோம் என தெரிவித்தார். இதையடுத்து போலீசார்  காதல் ஜோடியினர் பாதுகாப்பாக திரும்பிச் அழைத்துச் சென்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அரூர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

கருத்துகள் இல்லை:

Post Top Ad