தேசிய பெண் குழந்தை தின சிறப்பு விருது; விண்ணப்பிக்க மாவட்ட மகளிருக்கு ஆட்சியர் அழைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 அக்டோபர், 2021

தேசிய பெண் குழந்தை தின சிறப்பு விருது; விண்ணப்பிக்க மாவட்ட மகளிருக்கு ஆட்சியர் அழைப்பு.

தமிழ்நாடு அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் "பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும், பாடுபட்டு வீரதீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் முகமாக அதற்கான மாநில அரசு விருது ஒன்றை அறிவித்து அரசாணை பிறப்பித்து செயல்படுத்தி வருகின்றது.

இதன்படி வருடந்தோறும் மேற்குறிப்பிட்டவாறு சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) பாராட்டு பத்திரமும், ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. அதே போன்று, வருகிற 24 ஜனவரி 2022-ல் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட 18 வயதிற்குட்பட்ட(31 டிசம்பர் 2021-ன்படி) மேற்குறிப்பிட்டவாறு தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து  வருகின்ற 08.11.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்/மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்/மாவட்ட கல்வி அலுவலர்/மாவட்ட திட்ட அலுவலர்(ஒகுவதி)/காவல்துறை/தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்து, மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் சமூக நல ஆணையரகத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

மாவட்டங்களிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வு குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, அனைத்து தகுதிகள் பெற்ற ஒரு பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு 24.01.2022 அன்று மாநில விருது வழங்கப்படும். எனவே, தருமபுரி மாவட்டத்தைச்சேர்ந்த "பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும், பாடுபட்டு வீரதீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி..இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad