வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அரூர் வருவாய்த்துறை இணைந்து அரூர் அருகே உள்ள வரட்டாறு நீர்த்தேக்கத்தில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் மழை வெள்ளம் புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொது மக்கள் எவ்வாறு விழிப்புடன் இருந்து தங்களையும் தங்கள் உடைமைகளையும் தற்காத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, அரூர் மண்டல துணை வட்டாட்சியர் இரா. சுகுமார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் மா.பழனிசாமி, வருவாய் ஆய்வாளர் கோ.குமார், கிராம நிர்வாக அலுவலர் சி.சம்பத், வரட்டாறுநீர் தேக்கத்தைச் சார்ந்த நா.முருகன், பணி ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர் மா. பழனிசாமி தலைமையில் குழுவினர் அருகில் கிடைக்கும் காலியான தண்ணீர் கேன்கள் 50லிட்டர் காலி கேன் மூலம் எவ்வாறு நீர் நிலைகளில் இருந்து காப்பாற்ற முடியும் என்று ஒத்திகை மூலம் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக