நவீன வசதிகளுடன் கூடிய மகளிர் கழிப்பறையை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.செந்தில்குமார் திறந்து வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 செப்டம்பர், 2021

நவீன வசதிகளுடன் கூடிய மகளிர் கழிப்பறையை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.செந்தில்குமார் திறந்து வைத்தார்.

தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல் நிலை பள்ளியில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் கூடிய மகளிர் கழிப்பறையை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார் திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு போதிய சுகாதாரமான கழிப்பறைகள் இல்லாததால் மாணவிகள் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடும் அவலம் உள்ளது. அதனையடுத்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார் தனது தேர்தல் பரப்புரையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் தனது தொகுதியில் உள்ள அனைத்து அரசு மகளிர் பள்ளிகளில் நவீன தரமான சுகாதாரமான கழிப்பறைகள் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

அதனடிப்படையில் தான் வெற்றி பெற்றவுடன் தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்தாண்டு தருமபுரி மாவட்டத்தில் தொப்பூர் மற்றும்  பெரும்பாலையில் உள்ள அரசு மகளிர் மேல் நிலை பள்ளிகளில் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் கட்டப்பட்டு மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனையடுத்து இன்று தருமபுரி நகரில் உள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல் நிலை பள்ளியில் ரூபாய் 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பயன்படுத்தபட்ட நாப்கின்கள் அழிக்கும் இயந்திரங்களுடன் கூடிய நவீன கழிப்பறைகள் கட்டிமுடிக்கபட்டு மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.

அதனையடுத்து அங்கிருந்த ஆசிரியர்களிடம் கழிப்பறைகள் தினமும் சுகாதாரமுறையில் பராமறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தரமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து தனது நாடாளுமன்ற தொகுதியின் கீழ் அரசு மகளிர் மேல் நிலை பள்ளிகளில் தரமான நவீன வசதிகளுடன் கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெரும் என்றும், இதனால் பெண் குழந்தைகள் தங்களது கல்வியை தொடர வழிவகுக்கும் என்றார். 

மேலும் தங்களை பாஜக தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் மட்டும் அரசியல் செய்வதாக விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு தான் மத்தியிலும் மாநிலத்திலும் மக்களுக்காக செயல்பட்டு வருவதாகவும், இதனால் தன்னுடைய செயல்பாடுகளுக்காக மத்திய அரசு தனக்கு முதல் மதிப்பெண் வழங்கி உள்ளது. தன்னுடைய செயல்பாடும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து அண்ணாமலை விவாதிக்க தயாரா? என்று கேட்ட அவர் தங்களது கட்சி சட்டமன்ற அலுவலகத்திலேயே லாபம் என்று எழுதி பணம் எண்ணும் இயந்திரத்தை வைத்த கட்சி தான் பாஜக என்று விமர்சனம் செய்தார்.
மேலும் அவர் கூறுகையில் தருமபுரி மாவட்டத்தில் மலை கிராமங்களில் போதிய சாலை வசதி இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவது தனது கவனத்திற்கு வந்தது என்றும், அதனையடுத்து 6 மாத காலத்திற்குள் அனைத்து மலை கிராமங்களிலும் சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார். இந்நிகழ்சியின் போது நகர பொருப்பாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, மாதையன், தலைமை ஆசிரியை தெரசா, உதவி தலைமை ஆசிரயர் முருகன் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad