தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல் நிலை பள்ளியில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் கூடிய மகளிர் கழிப்பறையை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார் திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு போதிய சுகாதாரமான கழிப்பறைகள் இல்லாததால் மாணவிகள் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடும் அவலம் உள்ளது. அதனையடுத்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார் தனது தேர்தல் பரப்புரையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் தனது தொகுதியில் உள்ள அனைத்து அரசு மகளிர் பள்ளிகளில் நவீன தரமான சுகாதாரமான கழிப்பறைகள் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.
அதனடிப்படையில் தான் வெற்றி பெற்றவுடன் தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்தாண்டு தருமபுரி மாவட்டத்தில் தொப்பூர் மற்றும் பெரும்பாலையில் உள்ள அரசு மகளிர் மேல் நிலை பள்ளிகளில் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் கட்டப்பட்டு மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனையடுத்து இன்று தருமபுரி நகரில் உள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல் நிலை பள்ளியில் ரூபாய் 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பயன்படுத்தபட்ட நாப்கின்கள் அழிக்கும் இயந்திரங்களுடன் கூடிய நவீன கழிப்பறைகள் கட்டிமுடிக்கபட்டு மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.
அதனையடுத்து அங்கிருந்த ஆசிரியர்களிடம் கழிப்பறைகள் தினமும் சுகாதாரமுறையில் பராமறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தரமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து தனது நாடாளுமன்ற தொகுதியின் கீழ் அரசு மகளிர் மேல் நிலை பள்ளிகளில் தரமான நவீன வசதிகளுடன் கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெரும் என்றும், இதனால் பெண் குழந்தைகள் தங்களது கல்வியை தொடர வழிவகுக்கும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக