பென்னாகரம் அருகே ஜெல்மாரம்பட்டியில் மகா கும்பாபிஷேக விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 செப்டம்பர், 2021

பென்னாகரம் அருகே ஜெல்மாரம்பட்டியில் மகா கும்பாபிஷேக விழா.

பென்னாகரம் அருகே ஜெல்மாரம்பட்டியில் மகா கும்பாபிஷேக விழா.


தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டம் வட்டுவனஅள்ளி ஊராட்சி ஜெல்மாரம்பட்டியில்  கிராமத்தில் புதியதாக திருப்பணி செய்து கோபுரத்துடன் அமைந்துள்ள  ஸ்ரீ சக்தி வீட்டு மாரியம்மன், ஸ்ரீ பெரியாண்டவர், பெரியாண்டிச்சி, பத்ரகாளி, விநாயகர் கோயில் மற்றும் நவக்கிரக கோயில் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள்  கடந்த 1ம் தேதி துவங்கியது.

நேற்று 12ம் தேதி காலை 10.45 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி, நவக்கிரக லட்சுமி , முதல் கால யாக பூஜை, 108 திரவிய ஹோமம், பூர்ணாஹீதி நடந்தது.

விழாவின் முக்கிய நாளான இன்று காலை 6 மணிக்கு  2ம் கால யாக பூஜை, யாத்ரா தரிசனம் நடந்தது. காலை 9.15 மணியளவில் கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து சுவாமி மூர்த்தங்களுக்கும், கோபுர கலசங்களுக்கும் மகாகும்பாபிஷேகம் நடந்தது.

இதை தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, கோபூஜை, தச தரிசனம் நடந்தது. கும்பாபிஷேக விழாவை பூஜனீய ஸ்ரீ ராமானந்த சுவாமிகள் நடத்தி வைத்தார். விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் பிரசாதம் மற்றும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஐயப்ப சேவா சமாஜம் குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் ஜெல்மா ரம்பட்டி ஸ்ரீ பாலகிருஷ்ணா நாடக குழுவினரால் காலாக்னி சூலாக்னி  நாடகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சக்தி வீட்டுமாரியம்மன்  விழாக்குழுவினர், தெய்வதிரு வீரமலை கவுண்டர்,முனியம்மாள், குருசாமி ஊர்கவுண்டர் மாதப்பன், மாதம்மாள், ஸ்ரீ விக்னேஸ், நிகிதா, கீதா மற்றும் கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad