Type Here to Get Search Results !

பொதுமக்கள் 300 பேருக்கு கபசுர குடிநீரும், 120 பொதுமக்களுக்கு மதிய உணவும் வழங்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தர்மபுரி மாவட்டம் சார்பாக கொரானா பேரிடர் காலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு மக்கள் நலப்பணிகள் செய்து வருகிறார்கள்.

தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாலக்கோடு கிளை சார்பாக 300 நபர்களுக்கு கபசுர குடிநீர் இன்று வழங்கப்பட்டது இதில் கிளை நிர்வாகி பாசில் மற்றும் ஷிஹாபுத்தீன். நயீம் ஆகியோர் கலந்துகொண்டு கபசுரக் குடிநீர் வழங்கினார்கள்.
மேலும் பாப்பிரெட்டிப்பட்டி கிளை சார்பாக 120 ஏழைகளுக்கு மதிய உணவு சாப்பாடு பொட்டலங்கள் வீடு தேடி சென்று வழங்கப்பட்டது இதில் பாப்பிரெட்டிப்பட்டி கிளை நிர்வாகிகள் முகமது ஆரிப் .அஷ்ரப் அலி .அபூபக்கர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டு உணவு பொட்டலங்களை வழங்கினார்கள்.

மேலும் தருமபுரி அரசு  மருத்துவமனையில் தலசீமியா சிகிச்சை பெற்று வரும் இரண்டு குழந்தைகளுக்கு, ஜமத்தை சார்ந்த சகோதரர்கள், ஜஹாங்கீர் (B+) மற்றும் ரஹமத்துல்லாஹ் (O+) இரத்த தானம் செய்தார்கள். 

மேலும் கீர்த்தி என்கின்ற ஐந்து வயது பெண் குழந்தைக்கு O+ve  இரத்தம் ஜாமத்தை ரஹ்மத்துல்லாஹ் என்பவர் வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies