பெல்ரம்பட்டி திருமல்வாடி ஏரியில் மை கருவேல மரங்கள் மற்றும் முட்செடிகளை அகற்றி 1000 மரக்கன்றுகள் நட்ட சமூக ஆர்வலர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 மே, 2025

பெல்ரம்பட்டி திருமல்வாடி ஏரியில் மை கருவேல மரங்கள் மற்றும் முட்செடிகளை அகற்றி 1000 மரக்கன்றுகள் நட்ட சமூக ஆர்வலர்கள்.


பாலக்கோடு, மே 29-

தர்மபுரி மாவட்டத்தின் பாலக்கோடு அருகேயுள்ள பெல்ரம்பட்டி திருமல்வாடி ஏரியில் சீமை கருவேல மரங்கள் மற்றும் முட்செடிகளை அகற்றி 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி திருமல்வாடி, கரகூர், சீரியம்பட்டி மற்றும் கோட்டூர் பகுதி மக்களுக்கு முக்கியமான நீர் ஆதாரமாக விளங்குகிறது.


ஏரியைச் சுற்றி பரவியிருந்த சீமை கருவேல மரங்களை அகற்றி சுற்றுச்சூழலை மேம்படுத்தும் முயற்சியாக இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திரு.சதிஷ் மற்றும் ரேணுகா வட்டார வளர்ச்சி அலுவலரின் வழிகாட்டுதலின் பேரில் டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை, பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தர்மம் அறக்கட்டளை உள்ளிட்ட ஐந்து தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டன.


இந்த நிகழ்ச்சியை ஒப்பந்ததாரர்கள் ஜவகர் மற்றும் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர்மக்கள் முன்னணி பங்கு வகித்தனர். இந்த அறக்கட்டளைகள் ஏற்கனவே மேக்லாம்பட்டி, கரகதஅள்ளி, புலிக்கரை உள்ளிட்ட ஆறு ஏரிகளை சீரமைத்துள்ளன. திருமல்வாடி ஏரி அவர்களின் ஏழாவது பணியிடமாக அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad