தருமபுரி, மே 26 –
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் மெ.30.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11.00 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், வேளாண்மை தொடர்பான தங்கள் குறைகள் மற்றும் ஆலோசனைகளை இக்கூட்டத்தில் முன்வைத்து, தீர்வு பெற்றிடலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக