Type Here to Get Search Results !

பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 627 மனுக்கள் பெறப்பட்டது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று பெற்றுகொண்டார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (25.11.2024) நடைபெற்றது.


இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 627 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் 20.11.2024 அன்று நடைபெற்ற உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கள ஆய்வில் திரு.பழனிச்சாமி, த/பெ. சுப்பிரமணி, 5/307 சேலூர் கிராமம், எஸ். ஆம்மாபாளையம் அஞ்சல், சித்தேரி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தருமபுரி மாவட்டம் என்ற முகவரியில் உள்ள 100 சதவிகிதம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர் இதுநாள் வரை ஆதார் அட்டை எடுக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்களின் அறிவுரையின்படி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனாளிக்கு ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.


இதனை தொடர்ந்து, இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பள்ளி புத்தக மேம்பாட்டு திட்டம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், பேளார அள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பென்னாகரம் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.


பின்னர், இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஆர்.கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதிசந்திரா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.செம்மலை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நல அலுவலர் திரு.சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, தமிழ்நாடு-இடிஐஐ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.கௌதம்சண்முகம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies