Type Here to Get Search Results !

தூத்துக்குடி பெருவெள்ள நிவாரண உதவி பொருட்களை கொண்டு சென்ற மை தருமபுரி அமைப்பினர்.


மை தருமபுரி அமைப்பின் சார்பாக பேரிடர் காலங்களில் உதவி செய்து வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு கேரளா வெள்ள நிவாரண உதவி, கஜா புயல் நிவாரண உதவி, 2021 சென்னை வெள்ள நிவாரண உதவி, 2023 சென்னை மிக்ஜாம் புயல் நிவாரண உதவியை தொடர்ந்து தற்போது தூத்துக்குடி பெருவெள்ள நிவாரண உதவி பொருட்களை கொண்டு செல்கின்றனர். 

அரிசி, பருப்பு, எண்ணெய், உணவு பொருட்கள், நாப்கின், குடிநீர் என மூன்று இலட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கொண்டு சென்றனர்.இந்த பொருட்களை தூத்துக்குடி மாவட்டம் ஏரல், ஆலடியூர்  பகுதிகளிலா வழங்க உள்ளனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, தமிழ்ச்செல்வன், அருணாசலம், முஹம்மத் ஜாபர், அருள்மணி, ஹரீஷ் ஆகியோர் நிவாரண பொருட்களை கொண்டு சென்றனர். இந்த உதவி செயலுக்கு சிகேஎம் ரமேஷ், டிஎன்சி மணிவண்ணன், இளங்கோவன், தீபா சில்க்ஸ் தியாகராஜன், செல்வமாளிகை ராஜசேகரன், பிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies