முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 செப்டம்பர், 2023

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.


தருமபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் 5-ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு, சிறந்த முறையில் பணியாற்றிய காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று வழங்கினார்கள்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (25.09.2023) நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு அதீத முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். 


அந்த வகையில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது. இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 549 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.


இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் 5-ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு, இக்காப்பீட்டு திட்டத்தின் கீழ், சிறப்பாக சிகிச்சையளித்த 2 அரசு மருத்துவமனைகள் மற்றும் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு பாரட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.


மேலும், சிறந்த முறையில் பணியாற்றிய காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வார்டு மேலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் 10 பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள். சிறப்பாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டமைக்காக அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் பாராட்டி, கேடயம் வழங்கியதை தொடர்ந்து, இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்களை அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு நேரில் சந்தித்து, வாழ்த்துபெற்றனர்.


இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ம.சாந்தி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) (பொ) திருமதி நசீர் இக்பால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வி. மரியம் ரெஜினா, பழங்குடியினர் நல அலுவலர் திரு.பி.எஸ்.கண்ணன், உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) திரு.தமிழரசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad

-->