இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி தலைவரிடமும் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதனை தொடர்ந்து பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி இடம் பொதுமக்கள் குற்றம் சாட்டவே கட்சித் தொண்டர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் வீதி வீதியாக நடந்தே சென்று குப்பைகள் சாலை நெடுகிலும் இருப்பதைக் கண்டு அவரே முன்வந்து குப்பையை அல்ல தொடங்கினார். அது மட்டுமல்லாமல் சாக்கடை கால்வாயில் உள்ள கழிவுகளை மண்வெட்டியால் வாரி அப்புறப்படுத்தினார்.


இந்த நிகழ்வில் பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் செல்வகுமார், பாமக பொதுக் குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன், பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் ஜிம் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் ராசா உலகநாதன் நகர தலைவர் சந்தோஷ், நகர செயலாளர் ஜீவா, பாட்டாளி சமூக ஊடக பேரவை அன்பு பென்னாகரம் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக