அனுமன் ஜெயந்தியான இன்று காலை 6 மணிக்கு குப்பு செட்டிப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் இருந்து தீர்த்த குடம் ஊர்வலமாக விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமிக்கு கொண்டுவரப்பட்டது. காலை 9 மணிக்கு ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு மகா அலங்காரம் மற்றும் திவ்ய பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 3 மணிக்கு ஸ்ரீ ராமபிரான் பட்டாபிஷேக தரிசனத்துடன் திருத்தேர் திருவீதி உலா நடைபெற்றது.
அனுமன் ஜெயந்தி விழாவில் நிர்வாக அறங்காவலர் சி இடும்பன் சாமிகள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் இ.மணி, இ.சக்திவேல் மற்றும் ஊர் கவுண்டர் ஜெ அருள், மந்திரி கவுண்டர் ஏ கந்தசாமி, கோல்காரர் கணேசன், சிவகுரு மற்றும் குப்பு செட்டிபட்டி அனைத்து ஊர் பொதுமக்களும் பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக