வரும் 26ம் தேதி TNPSC தேர்வுக்கு சிறப்பு பேருந்து ஏற்பாடு - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 டிசம்பர், 2022

வரும் 26ம் தேதி TNPSC தேர்வுக்கு சிறப்பு பேருந்து ஏற்பாடு - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிறை அலுவலர் (ஆண் மற்றும் பெண்) பதவிக்கான போட்டித் தேர்வு (தேர்வு நாள்: 26.12.2022) எழுதும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிறை அலுவலர் (ஆண் மற்றும் பெண்) பதவிக்கான கொள்குறிவகைத்தேர்வு 26.12.2022 (திங்கட்கிழமை) முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இருவேளைகளில் பென்னாகரம் வட்டத்தில் உள்ள ஜெயம் பொறியியல் கல்லூரியில் இணையவழி முறையில் (Computer Based Exam) நடைபெறவுள்ளது.


இதில் மொத்தம் 410 தேர்வர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர். தேர்வு மையத்தில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையத்தில் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு செல்லவும், கடைசிநேர அலைச்சல்களை தவிர்க்குமாறும், தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad