தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீரியனஹள்ளி கிராமத்தில் இரவு நேரங்களில் மொரப்பூர் காப்புக்காடு பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல், கரும்பு, வாழை, மாமரங்கள் உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக 2 காட்டு யானைகள் இப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் யானைகளை விரட்டுவதில் வனத்துறையினர் பெயரளவிற்க்கு மட்டுமே செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதை அடுத்து பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கேபி. அன்பழகன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், இரவு நேரத்தில் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை மயக்கி ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனத்துறை பகுதிகளுக்கு கொண்டு செல்து விட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக